Wednesday, May 19, 2010

மாட்டுவண்டியில் கடத்தப்பட்ட மூட்டைகள்

மாட்டுவண்டியில் இருந்தது என்ன?             ..........................................................................................

    ஒரு சிறிய கிராமத்தில் பண்ணையில் இருவர் வேலைசெய்து வந்தனர். அதில் ஒருவர் பெயர் ராஜு கடின உழைப்பாளி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உழைப்பவர். மற்றொருவர் ராமு இவரும் அதே பண்ணையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்பவர் ஆனால் ராமு ராஜுவைவிட அதிக கூலி பெறுபவர். ராஜு ஒரு நாள் முதலாளியிடம் கூலி வித்தியாசத்தை கேட்டான் அதற்கு முதலாளி தொலைவில்வரும் மாட்டுவண்டி எங்கிருந்து வருகிறது என்று கேட்டுவர  சொன்னார். ராஜுவும் வண்டிக்காரரிடம் விசாரித்து வந்தான். "வண்டி பாகத்து ஊரில் இருந்து வருகிறதாம்". "வண்டியில் என்ன கொண்டு செல்கிறார்கள்". மீண்டும் ஓடி போய் கேட்டுவிட்டு வந்தான் ராஜு. "வண்டியில் நிலகடலை செல்கிறது". "ஒ அப்படியா யார்வீட்டுக்கு  போகிறதாம்". ஓடி போய் கேட்டு விட்டு வந்தான். " அந்த வண்டி பக்கத்து ஊர் பண்ணையார் விட்டுக்கு செல்கிறதாம். அதே நேரம் ராமுவும் அங்கு வந்தான் அவனிடம் நீ  போய் அந்த மாட்டுவண்டியில் என்ன செல்கிறது என்று கேட்டு வா என்றார் முதலாளி. அவனும் விசாரித்து வந்தான். " என்ன பா மாட்டுவண்டியில் என்ன?". அய்யா அதில் நிலகடலை இருக்கிறது. பக்கத்துக்கு கிராமத்திலிருந்து அடுத்த ஊர் பண்ணையார் விட்டுக்கு செல்கிறது" என்றான். முதலாளி ராமுவை போக சொல்லிவிட்டு ராஜுவை பார்த்து "பார்த்தாயா இதுதான் ராமு, நான் கேட்ட ஒரு கேள்விக்கு அவன் முழுவிவரத்தையும் கொண்டுவந்தான் ஆனால் நீ எப்படி பார்த்தாயா!" என்று வித்தியாசத்தை எடுத்து காட்டினார்.

"திறமை இருந்தால் தான் மதிப்பு".

எப்பொழுதோ படித்த கதை.

No comments:

Post a Comment