Sunday, May 16, 2010

தேவாலயத்தில் நடந்தது என்ன?


தேவாலயத்தில் நடந்தது என்ன? தேவாலயத்தில் ஒரு நாள்..............

   தேவாலயத்தில் ஒரு நாள் புதிய பாதர் வந்திருந்தார். அவருக்கு அனைவரும் படித்து இருக்க வேண்டும் என்று ஆசை பட்டார். தேவாலயத்தில் வேலை செய்யும் அனனவரையும் தனது அறைக்கு வரசொல்லி பரிசோதனை நடத்தினார். படிக்காத நபர்களை வெளியேற்றினர். அனனவரும் படித்து இருந்தனர் ஆனால் ஆலயத்தில் மணி அடிக்கும் ஒருவன் மட்டும் படித்திருகவில்லை அவனை மட்டும் வேலையை விட்டு அனுப்பினார். அவனும் எவ்வளவோ எடுத்து கூறியும் அதனை அவர் ஏற்க மறுத்து விட்டார். அவனும் வேலையை விட்டு வெளிய சென்றான். கவலையில் ஊர் ஊராக சுற்றிகொண்டிருந்த அவன், சிகிரட் வாங்க கடையை தேடினான்  அந்த பகுதியில்  கடைகள் இல்லை. அப்பொழுது அங்கிருக்கும் சிலர் கூறினர் சில  கிலோ மீட்டர் சென்றால் தான் சிகிரட்  கிடைக்கும் என்று. இதை அவன் சிந்தித்து நாமே ஏன் ஒரு கடை வைக்க கூடாது என்று. கடை வைத்தான் நல்ல லாபம் கிடைத்தது. சொந்தமாக ஒரு  சிகிரட் நிறுவனம் ஆரம்பித்து முன்னறினான். சிறிது காலம் கழித்து அவன் தேவாலயத்துக்கு சென்று பாதரை சந்தித்து நான் யாரென்று தெரிகிறதா என்று கேட்டான். அவருக்கு நினைவு இல்லை. நான் தான் மணியடித்து கொண்டிருந்தவன் என்று கூறினான். ஆம்மாம் நான் தான் உன்னை வேலையில் இருந்து வெளியேற்றினேன். மிகுந்த நன்மை செய்திர்கள் அய்யா. "ஏன் கஷ்டபடுகிறாயா!". "படித்திருந்தால் இந்த பிரச்னை இல்லை பார்த்தாயா". "நான் படித்திருந்தால் இன்னும் கோவிலில் மணி தான் அடிக்கணும்". ஆனால் இப்பொழுது நான் நல்ல நிலைமையில் இருக்கேன் என்றான். 

எப்பொழுதோ படித்த கதை.

No comments:

Post a Comment